Friday, 15 August 2014


பிராய்லர் கோழி சாப்பிட்டால் ?

40 நாட்களில் வளர்க்கப்பட்டு விற்பனைக்கு வந்து விடும் கோழி வளர 12 விதமான கெமிக்கல்ஸ், கோழி சாப்பிடும் உணவோடு கலக்கப்படுகிறது. விரைவாக வளரும் பொருட்டு பலவித கெமிக்கல்ஸ் சேர்க்கப்படுகிறது (அந்த வளரும் கெமிக்கல்ஸ் நமது உயிர் அணுக்கலை பாதித்து, உடல் செல்கலை அபரிமிதமான வளர்ச்சியை உண்டாக்கி புற்று நோய் மற்றும் இளமையில் முதுமையை கொடுத்து விடுகிறது. விளைவு குறைந்த ஆயுள்). இளம் வயது சிறுமிகள் பெரிய மனுஷி ஆவதற்கும் இந்த கெமிக்கல்ஸ் தான் காரணம்.

பிராய்லர் கோழியால் ஏற்படும் உடல்நல பாதிப்பு பற்றி சென்னையில் பிரபல ஈரல் மற்றும் குடல்பை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் வெங்கடேசன் கூறியதாவது:-

நாட்டுக் கோழிகளுக்கு பெரும்பாலும் தானியங்கள் போன்ற இயற்கையான உணவுகள் அளிக்கப்படுகிறது. இதனால் அவை குறிப்பிட்ட கால அளவில் தான் வளர்ச்சி பெறும். இதனால் அதில் புரோட்டீன், புரதச் சத்துக்கள் நிறைந்து காணப்படுகிறது.

இந்த நாட்டு கோழியை சாப்பிடுவோருக்கு தேவையான புரோட்டீன், புரதச் சத்துக்கள் கிடைக்கின்றன. இதன் மூலம் நமக்கு தேவையான நோய் எதிர்ப்புச் சக்தி கிடைக்கிறது.

ஆனால் பிராய்லர் கோழி இறைச்சி மனிதனின் உடல் நலத்திற்கு பல்வேறு கேடுகளை விளைவிக்கிறது. தொடர்ச்சியாக பிராய்லர் கோழி சாப்பிடுவோர் குடல் புற்றுநோயின் பிடியில் சிக்கி விடுவார்கள். இதற்கு காரணம் பிராய்லர் கோழியானது இயற்கையான முறையில் வளர்க்கப்படாதது தான்.

6 மாதத்தில் முழு வளர்ச்சி அடைய வேண்டிய இக்கோழிகள் பல்வேறு ரசாயனங்கள் மூலம் மிகவும் குறுகிய காலத்திலேயே முழு வளர்ச்சியை பெற்று விடுகின்றன. ரசாயனங்கள் மூலம் வளர்ச்சி அடையும் பிராய்லர் கோழி சதையில் கெட்ட கொழுப்பு (கொலஸ்ட்ரால்) அதிக அளவில் உள்ளது. இதை நாம் சாப்பிடும்போது நமது உடலில் கெட்ட கொழுப்பு சத்துதான் அதிக அளவில் சேருகின்றன. இந்த கெட்ட கொழுப்பானது நமது கல்லீரலில் வீக்கத்தை ஏற்படுத்தி விடுகிறது. இதனை கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் என்கிறோம்.

பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவோரின் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதால், அது ரத்த நாளத்தில் புகுந்து அடைப்பை ஏற்படுத்துகிறது. இதனால் ரத்த அழுத்தம், ரத்த கொழுப்பு ஏற்படுகிறது.

நம் நாட்டில் ஏராளமானோர் பிராய்லர் கோழி இறைச்சி சாப்பிடுவதால் 100-ல் 65 பேருக்கு கொழுப்பு நிறைந்த ஈரல் நோய் உள்ளது. இங்குள்ள பெரும்பாலான உணவகங்களில் ஏற்கனவே பயன்படுத்திய எண்ணையை அதிக அளவில் பயன்படுத்துவதால் கல்லீரல் கோளாறின் பிடியில் சிக்கித் தவிக்கிறார்கள்.

பொதுவாக கோழி இறைச்சியில் கொழுப்புச் சத்து அதிகம். அதிலும் பிராய்லர் கோழியில் கெட்ட கொழுப்புச் சத்து அதிகமாக இருப்பதால் அதை தவிர்ப்பது நல்லது. நாட்டுக்கோழி இயற்கையாக வளர்க்கப்படுவதால் நமது உடம்பை பதம் பார்ப்பதில்லை.


ஆண் தவறாமல் சாப்பிட  வேண்டிய  உணவுகள் 
ஒரு சமூகத்தின் முக்கியமான அங்கமாக இருந்து குடும்பத்தினரையும் கவனித்துக் கொள்ளும் ஆண்களின் ஆரோக்கியம் இன்றியமையாதது. ஆண்களும் பெண்களும் சரிசமமாக இருக்கும் இந்தக் காலத்தில். பெண்களின் உடல் ஆரோக்கியம் எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு ஆண்களின் ஆரோக்கியமும் முக்கியம். அதிகரித்து வரும் உடல் சார்ந்த பிரச்சனைகள் மற்றும் மனச்சோர்வுகளால் பாதிக்கப்பட்டிருக்கும் ஆண்கள் 30 அல்லது 40 வயது வரை காத்திராமல், தங்கள் ஆரோக்கியத்தை இளம் வயதிலேயே பேணத் துவங்க வேண்டும். நிச்சயம் தவிர்க்க வேண்டிய அதிக கலோரிகள் கொண்ட 20 இந்திய உணவுகள்!!! இங்கே ஆண்களுக்கு ஆரோக்கியம் ஊட்டும் இயற்கையான 20 வகை உணவுகளைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து, அவற்றைப் பின்பற்றி, உடலை ஆரோக்கியமாகவும், எளிதில் நோய் தாக்காதவாறும் பார்த்துக் கொள்ளுங்கள்.

மிதவெப்ப பழங்கள் :

மிதவெப்ப பழங்களான மாம்பழம், பப்பாளி போன்ற பழங்களின் தோலில் பயோஃப்ளேவோனாய்டுகள் மற்றும் பல சத்துப்பொருட்கள் உள்ளன. ஆகவே ஆண்கள் வெயில் காலத்தில் குறைந்த விலையில் கிடைக்கும் இந்தப் பழங்களை தவறாது உட்கொள்வது அவசியம்.

சிகப்பு குடைமிளகாய் :

ஆரஞ்சு பழச்சாற்றை விட மூன்று மடங்கு அதிகமான அளவில் வைட்டமின் சி சத்தானது சிகப்பு குடமிளகாயில் உள்ளது. அதிலும் குடைமிளகாயை பச்சையாக உட்கொள்வது உடலில் பயோஃப்ளேவோனாய்டுகளைச் சேர்க்கும் என விஞ்ஞானிகள் நம்புகிறார்கள்.

பூண்டு :

பலவகைகளில் மிகச்சிறந்த உணவாக பூண்டு கருதப்படுகிறது. பூண்டின் நோய்தடுப்பு குணத்தை அறிந்திருக்கும் நம் உணவு முறை, அதன் மருத்துவ குணங்களை அறிந்திருக்கிறது. அதுமட்டுமல்லாது சீரான இரத்த ஓட்டத்திற்கும் பூண்டு உதவுகிறது.

க்ரீன் டீ அல்லது கருப்பு டீ

பாலிஃபீனால்கள் எனப்படும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமுள்ள க்ரீன் டீ புற்றுநோய் செல்கள் பிரிவதை தடுக்கிறது. கருப்பு டீ எனப்படும் பால் கலக்காத டீயிலும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகளவில் உள்ளன. அதிலும் பாலிஃபீனால்கள் அதிகமுள்ள க்ரீன் டீ வயிறு, நுரையீரல், குடல், ஈரல் போன்றவற்றில் ஏற்படும் புற்றுநோய்களைத் தடுக்கிறது.

பால்

பால் பொருட்கள் சீஸ், தயிர், பால் ஆகியவற்றை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வது நலம். ஒரு பகுதி பாலில் 8 அவுன்ஸ் கார்னிடைன் உள்ளது. அதுமட்டுமல்லாது கால்சியம், வைட்டமின் ஏ, வைட்டமின் டி போன்ற சத்துகளும் உள்ளன.

மாட்டுக்கறி:

கார்னிடைன் அதிகமுள்ள மாட்டுக்கறியில் அமினோ அமிலம், புரதம், இரும்புச்சத்து ஆகியவை உள்ளன.

தக்காளி :

செடிகளில் உள்ள லைகோபைன் எனப்படும் இயற்கையான வேதியியல் பொருள் தக்காளியில் அதிகம் உள்ளது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்டான இது விரை, நுரையீரல், வயிற்று புற்றுநோயை தடுக்கிறது.

மாதுளை பழச்சாறு

விரை புற்றுநோய்க்கு இது மருந்தில்லை என்றாலும் புற்றுநோயின் பரவலை தடுக்க உதவுகிறது. அதிலும் தினமும் 8 அவுன்ஸ் மாதுளை சாறு குடித்தால், விரையின் ஸ்திரத்தன்மை மேம்படும்

முழு தானியங்கள் :

நம் உணவில் பெரும்பங்கு வகிக்கும் முழு தானியங்களில் ஜிங்க் சத்து நிறைய இருக்கிறது. ஆண்களின் ஆண்தன்மையை மேம்படுத்த உதவும் துத்தநாகம் உடலில் குறைந்தால், மலட்டுத்தன்மை ஏற்படும். எனவே இதனை அதிகம் உணவில் சேர்ப்பது இன்றியமையாதது.

வேர்க்கடலை :

வேர்க்கடலையில் துத்தநாகச் சத்து அதிகம் இருப்பதோடு, உடலுக்கு வேண்டிய அத்தியாவசியமான கொழுப்பு அமிலங்கள் இருப்பதால், இதனை ஆண்கள் அதிகம் உட்கொண்டால், சரும வறட்சி, மலட்டுத்தன்மை, மூளை திசுக்கள் குறைபாடு ஆகியவற்றை தடுக்கலாம்.

மீன் :

ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிகம் உள்ள மீன் உணவானது புரதத்திலும் சிறந்து விளங்குகிறது. அதிலும் மீனில் உள்ள புரதச்சத்து, HDL எனப்படும் இதய நோய்களை தவிர்க்கும் நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது.

கேழ்வரகு

கேழ்வரகில் கால்சியம் மிக அதிகமாக உள்ளது. அதாவது 300 கிராம் கேழ்வரகில் 100 கிராம் கால்சியம் உள்ளது. மேலும் ஆஸ்டியோபோரோசிஸ் எனப்படும் எலும்பு நோய் வருவதை கேழ்வரகு தடுக்கிறது. அதுமட்டுமின்றி இதில் உள்ள துத்தநாகம் மற்றும் நார்ச்சத்து, டிஸ்லிபிடிமியா, நீரிழிவு மற்றும் உடல் எடை அதிகரிப்பு ஆகியவற்றை தடுக்கிறது.

இளநீர்

வெளியே கடினமாகவும், உள்ளே மிருதுவாகவும் உள்ள இளநீர், உடலின் மின்பகுளி அளவை சீராக வைக்கிறது. உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பு ஆகியவற்றில் இருந்து காக்கிறது. மேலும் வயிற்றுப் போக்கின் மூலம் ஏற்படும் நீர் குறைபாடு ஆகியவற்றில் இருந்தும் காக்கிறது. அதுமட்டுமல்லாது மக்னீசியம், பொட்டாசியம், மாங்கனீஸ், வைட்டமின் சி ஆகிய சத்துக்களும் நிரம்பி உள்ளன. கோடைக்காலத்தில் உடலில் ஏற்படும் நீர் குறைபாட்டில் இருந்து பாதுகாக்கிறது.

இலவங்கப்பட்டை:

இலவங்கப்பட்டையில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் நுண்ணியிர்கள் வளர்வதை தடுக்கின்றன. டைப்-2 நீரிழிவு நோயை தடுக்கவும் லவங்கப்பட்டை பயன்படுகிறது.