Wednesday, 13 August 2014


தோள்பட்டைக்கு வலிமை தரும் பயிற்சி 

இடுப்பு, தோள் பட்டைகள் வலிமை அடைய இந்த பயிற்சி செய்யலாம். மேலும் பெண்கள் இந்த பயிற்சியை தொடர்ந்து செய்து வந்தால் மார்பு பகுதி கவர்ச்சிகரமாகமாறும். இந்த பயிற்சி எப்படி செய்வது என்பதை பார்க்கலாம்... 

8 முதல் 10 கிலோ எடையுள்ள டம்ப்பெல்ஸ் எடுத்து கொள்ளவும். படத்தில் உள்ளது போல் உள்ள சேரில் கால்களை கீழே நீட்டி கொண்டு படுத்துக் கொள்ளவும். வலது கையை வயிற்றின் மேல் வைத்துக்கொள்ளவும். இடது கையால் டம்ப்பெல்ஸ் மேலே தூக்கவும். பின்னர் கீழே இறக்கவும். இவ்வாறு 10 முறை செய்யவும்.

இதே போல் வலது கையில் செய்யவும். மாறி மாறி இவ்வாறு இந்த பயிற்சியை செய்ய வேண்டும். ஆரம்பத்தில் இந்த பயிற்சியை 15 முறை செய்தால் போதுமானது. பின்னர் படிப்படியாக எண்ணிக்கையின் அளவை அதிகரித்து 30 முறை செய்யலாம்.

இந்த பயிற்சியை தொடர்ந்து 3 மாதம் செய்து வந்தால் நல்ல பலன் கிடைப்பதை காணலாம். இந்த உடற்பயிற்சி பெண்களுக்கு மிகவும் உகந்தது. ஜிம்முக்கு சென்று செய்ய முடியாதவர்கள் வீட்டிலிருந்தும் இந்த பயிற்சியை செய்யலாம். டம்ப்பெல்ஸ் இல்லாதவர்கள் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் நிரப்பி செய்யலாம்.

Please Visit : www.unitedsportsemporium.com


பியர் உடலுக்கு நல்லது என்பது உண்மைதானா ?

பியர் அருந்தினால் உடல் கூல் ஆகும், மற்ற சரக்குகளில் இருப்பது போல் இதில் ஆல்கஹால் அளவு குறைவாக இருப்பதால் உடலுக்கு நல்லது என்றெல்லாம் 'குடி'மகன்கள் தங்கள் இஷ்டத்திற்கு நியாயங்களை வழங்கி கொண்டு பியர், மற்ற சரக்குகளை விட உடலுக்கு நல்லது என்பது ஏதோ வேதவாக்கு போல் நம்பப்பட்டு வருகிறது.

ஆனால் நடுநிலையாகப் பார்த்தோமானால் அதன் உண்மையான ஆரோக்கிய விளைவுகள் என்ன என்பதைப் பார்த்தால் நமது மாயைகள் முடிவுக்கு வரும்.

உண்மையில் பியரில் சற்றே குறைவான அளவுகளில் சில வைட்டமின்கள் உள்ளது. ஆனால் அதுவும் தயாரிப்பில் காணாமல் போய்விடும். சிறிதளவே அதில் பி- 6 வைட்டமின் மற்றும் பிற கனிமங்கள் உள்ளன. ஆனால் அது பியர் தயாரிப்பு முறையில் காணாமல் போகிறது.

ஆதி சமூகங்கள் பியர் தயாரிப்பில் ஈடுபட்டபோது இயற்கையான முறைகளில் அதனை தயாரித்ததால் அதன் வைட்டமின் சத்துகள் தக்கவைக்கப்பட்டு ஆல்கஹால் அளவு குறைவாக தயாரிக்கப்பட்டது.

ஆனால் இன்றைய நவீன முதலாளிய சமூகங்களில் பியர் தேவைகள் அதிகரிக்க, அதன் உற்பத்தி முறைகளில் பெரிய மாற்றம் ஏற்பட்டது. தானியத்தின் ஸ்டார்ச்சை சர்க்கரையாக மாற்ற மாத்தேறலை (மால்டிங்) பயன்படுத்துகிறது. பின்பு சர்க்கரையாக மாற்றப்பட்டது புளிக்கவைக்கப்படும். இது மிகவும் எளிமையான விளக்கமாகும். ஆனால் இதில் சிக்கல் நிறைந்த பல்வேறு நடைமுறைகள் உள்ளன.

அயல்நாடுகளில் இதன் மீது அதிக கவனம் செலுத்தப்பட்டு தயாரிக்கப்படுகிறது. நம் இந்திய பியர்கள் எப்படி தயாரிக்கப்படுகின்றன என்பது பற்றி வெளிப்படையான தகவல்கள் தேவை!

அதாவது ஒரு குறிப்பிட்ட தரநிலைகளில் தயாரித்தால் மட்டுமே பியர் அதன் ஊட்டச்சத்து உள்ளடக்கங்களைத் தக்கவைக்க முடியும், இது சில அயல்நாட்டு பியர்களிலேயே உள்ளது. வடிகட்டு முறையில் பல ஊட்டச்சத்துக்கள் போய் விடும்.

355மிலி பியரில் உள்ள 150 கலோரிகளில் இரண்டில் மூன்று பங்கு இருப்பது வெறும் ஆல்கஹால்தான், மீது ஒன்றில் மூன்று பங்கு சர்க்கரை உள்ளது. புரோட்டீன் அளவு மிகவும் குறைவு அதனால் எந்தவித பயனும் இல்லை என்றே கூறிவிடலாம்.

எனவே பியரில் ஊட்டச்சத்துக்கள் அதிகம் என்பது உண்மையல்ல. ஆல்கஹாலதான் அதிகம் உள்ளது.

மேலும் பியர் குடிப்பவர்களில் சிலர் 'அளவுக்கு அதிகமாக குடிப்பதில்லை நான் 3 பியர்கள் குடிப்பேன் அவ்வளவுதான், 2 பியர்கள் குடிப்பேன் அவ்வளவுதான்' என்பார்கள் ஆனால் ஒரு லிட்டர் பியரில் உள்ள கலோரியின் அளவு 600! இதுதான் உடல் எடை அதிகமாகக் காரணமாகிறது. மேலும் அதிகமாக பியர் குடிப்பதினால் அடிக்கடி சிறுநீர் கழிக்கநேரிடும் இதனால் பியரில் உள்ள குறைவான சில சத்துகளும் சிறுநீரில் வெளியேறிவிடுவதுதான் நடக்கும்.

'நான் சரக்கு அடிப்பதில்லை பியர் மட்டும்தான் அடிக்கிறேன் மச்சி என்று கூறும் நண்பர்களை எச்சரியுங்கள், பியர் மீதான இந்த தவறான நம்பிக்கைகளால் அது அதிகம் எடுத்துக் கொள்ளப்படுகிறது. இதனால் உடலில் உள்ள நீர் வற்றுகிறது. இதனால் அதிக பியர்கள் தேவைப்படுகிறது. இதனையடுத்து பியர் அடிமைகளாகிவிடுவதுதான் நடைபெறுகிறது.

மேலும் பியருடன் நாம் என்ன சைட் டிஷ் சாப்பிடவேண்டும் என்பதையும் திட்டமிடுதல் அவசியம். உருளைக்கிழங்கு சிப்ஸ், கடலை, பட்டாணி என்று சாப்பிடுவதை நாம் பார்த்திருக்கலாம் ஆனால் இதுபோன்ற உப்புக்கார பொருட்களால் தாகம் அதிகம் எடுக்கும் மேலும் பியர்கள் குடிப்போம்! எனவே சாலட்கள், கடல் உணவுகளான மீன், முட்டை, இறைச்சி கூட எடுத்துக் கொள்ளலாம் என்கின்றனர் நிபுணர்கள்.

பியரில் இருக்கும் குறைவான நன்மைகளின் பயன்களை உடல் பெறவேண்டுமென்றால் குறைவாகக் குடிப்பதே சிறந்தது.


உருளை கிழங்கு சாப்பிட்டால் இரத்த அழுத்தம் குறையுமாம்

உருளைக் கிழங்கு என்று சொன்னாலே நம்பில் பலருக்கு ஞாபகம் வருவது மொறுமொறு சிப்ஸ், நொறுக்குத்தீனிகளில் உருளைக் கிழங்கு சிப்ஸ்சிற்கு தனி இடம் உண்டு. குழந்தைகள் இளைஞர்களை கவர விதவிதமான ருசிகளில் உருளைக் கிழங்கு சிப்ஸ்கள் தயாரிக்கப்படுகின்றன.

அதே நேரத்தில் உருளைக் கிழங்கு என்றாலே 'ஐயோ' என்று அலறுபவர்களும் உண்டு. உடல் பருமன், கொழுப்பு போன்ற பிரச்சினைகளை நினைத்து உருளைக் கிழங்கை கண்டு ஒதுங்குபவர்களும் இருக்கிறார்கள்.

ஆனால் 'நீங்கள் நினைப்பது தவறு. உருளைக் கிழங்குக்கு இரத்த அழுத்தத்தை குறைக்கும் அசாத்திய திரன் உண்டு என்று ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

ஒரு நாளில் இரண்டு அல்லது மூன்று வேளை உருளைக் கிழங்குகளை உணவில் சேர்த்துக் கொள்வதால் உடல் எடை அதிகரிப்பதில்லை. மேலும் ஓட்ஸ் போன்ற உணவுகளை சாப்பிடும் போது ஏற்படும் அளவுக்கு இரத்த அழுத்தம் குறைகிறது என்று விஞ்ஞானிகள் கூறுகிறார்கள்.

அமெரிக்காவைச் சேர்ந்த ஜோய் வின்சன் என்ற நிபுணர் தலைமையிலான குழு இது தொடர்பான ஆய்வை நடத்தியது.

இந்த ஆய்வுக்காக கருஞ்சிவப்பு நிற உருளைக் கிழங்கை பயன்படுத்தினார்கள். எண்ணை இன்றி மைக்ரோ வேவ் அடுப்பு மூலம் சமைத்தனர். இதை இரத்த அழுத்தம், உடல் பருமன் போன்ற பாதிப்புள்ள நபர்களுக்கு கொடுத்தனர். தினமும் 2 வீதம் 2 மாத காலம் இந்த உருளைக் கிழங்கு கொடுத்து வந்தனர்.

பிறகு அவர்களின் இரத்த அழுத்தம் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. அப்போது அவர்களின் இரத்த அழுத்தம் குறைந்திருந்தது. அத்துடன் அவர்களில் யாருக்கும் உடல் எடையும் அதிகரிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதெல்லாம் சரி, இரத்தக் கொதிப்பை குறைக்குமளவுக்கு உருளைக் கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?

பைடோ கெமிக்கல்என்று அழைக்கப்படும் தாவரம் சார்ந்த சில இரசாயனப் பொருட்கள் மற்றும் விட்டமின்கள் உருளைக் கிழங்கில் அதிகமாக இருக்கின்றன. இவையே உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் வேலையை செய்கின்றன.

உருளைக் கிழங்கு பிரென்ஞ்சு பிரை, சிப்ஸ் போன்றவற்றை அதிக வெப்பத்தில் சமைப்பதால் இரத்த கொதிப்பை குறைக்கவல்ல இரசாயனப் பொருட்களும், பைடோ இரசாயன பதார்த்தம் அழிக்கப்பட்டு விடுகின்றன. எனவே சிப்சில் எஞ்சியிருப்பது உருளைக் கிழங்கின் மாவுச்சத்து கொழுப்புச் சத்து மற்றும் தாதுக்கள் மட்டுமே என்று சிப்ஸ் பிரியர்களின் வயிற்றில் புளியைக் கரைக்கிறார் வின்சன்.

இந்த ஆய்வில் பயன்படுத்தப்பட்டது, கருஞ்சிவப்பு நிற உருளைக் கிழங்கு என்பதால் நீங்கள் புலம்ப வேண்டாம். ஏனென்றால், வெள்ளை மற்றும் கருஞ் சிவப்பு நிற உருளைக் கிழங்கு இரண்டுக்கும் ஒரே திறன் தான் இருக்குமென்று உறுதியாக நம்புகிறார் இந்த ஆய்வை நடத்திய ஜோய் வின்சன்.

இனிமேல் இரத்த அழுத்தம் குறைய தைரியமா உருளைக் கிழங்கு சாப்பிடலாம்!