Wednesday, 3 February 2016

நமது உடல் நலத்தை பேணுவதற்கு நடை பயிற்சி, உடற்பயிற்சி அவசியம்:

குறைந்தது ஒரு வாரத்தில் 5 நாட்களுக்கு குறைந்தது 30 நிமிடங்கள் மீதமான உடற்பயிற்சி செய்ய வேண்டும். உதாரணமாக சுறுசுறுப்பான நடைபயிற்சிகள் செய்ய வேண்டும். சைக்கிள் ஓட்டத்திலும் ஈடுபடலாம்.

நடைபயிற்சி செய்பவர்கள் தினமொன்றுக்கு 10,000 தடவைகள் அடியெடுத்து நடப்பது சிறந்தது என்று உலக சுகாதார அமைப்பு கூறுகிறது.

நடைபயிற்சி, உடற்பயிற்சி, சைக்கிளோட்டம் என்பவற்றிலிருந்து நாம் வெகுதூரம் சென்று கொண்டிருப்பதாலேயே தொற்றா நோய்கள் எம்மை அணுகிக் கொண்டிருக்கின்றன. கொஞ்சம் தூரம் கூட நடக்க விரும்பாதவர்கள் எம்மத்தியில் இல்லாமல் இல்லை.

உணவில் உப்பை அளவுக்கதிகமாக சேர்க்காமல் விடுவதை போன்று சீனியையும் ஒதுக்க வேண்டும். நீரிழிவு நோய் அல்லாத ஒருவர் நாளொன்றுக்கு 6 தேக்கரண்டி சீனியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

பழவகைகள், காய்கறி வகைகளை அதிகளவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். ஒருவருக்கு நாளொன்றுக்கு 400 கிராம் பழங்களும் காய்கறி வகைகளும் எடுக்க வேண்டும்.

ஒருவரின் இரத்த அழுத்தம் 140 – 90க்கும் இடைப்பட்டதாக இருக்க வேண்டும். இவ்வாறு இருக்கும்படி கண்காணித்துக் கொண்டிருக்க வேண்டும். ஆண்டு தோறும் அல்லது மாதம் தோறும் இரத்த அழுத்தம் சோதித்து பார்த்துக் கொள்வது நல்லது.

எண்ணெய் கொழுப்புள்ள உணவு வகைகளை தவிர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. குறிப்பாக டிரான்ஸ் கொழுப்பு அதாவது உடலுக்கு ஒவ்வாத கொழுப்பு உள்ள உணவு வகைக ளைக் குறைக்க வேண்டும்.

வணிக ரீதியாக தயாரிக்கப்படுகின்ற சிற்றுண்டிகள், கேக் வகைகள், பேஸ்ட்ரி வகைகள், மாஜரின், மீளச்சூடாக்கிய எண்ணெய் வகைகளில் டிரான்ஸ் கொழுப்பு அதிகமாக காணப்படுகிறது.

இரவு உணவுக்காக பிரைட் ரைஸ் மற்றும் எண்ணெய் நிறைந்த உணவு வகைகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை வழங்கமாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

பாடசாலைக்கு பிள்ளைகளை அனுப்பும் போது வேலைப்பளு, சோம்பேறித்தனம், நேரமின்மை காரணமாக பேஸ்ட்ரி போன்ற சிற்றுண்டிகளை பிள்ளைகளுக்கு கொடுக்க சில பெற்றோர் முற்படுகிறார்கள்.

சத்துள்ள உணவுகளை பிள்ளைகளுக்கு கொடுத்தாலும், சிற்றுண்டிகள் வாங்கித் தரும்படி அடம்பிடிக்கும் அளவுக்கு சிற்றுண்டி வகைகளுக்கு பிள்ளைகள் பழக்கப்பட்டு விட்டார்கள்.

இதே போன்று வேலைக்குச் செல்லும் ஆண் பெண் இருபாலாரும் பயணித்துக் கொண்டிருக்கும் போதே காலை உணவை சிற்றுண்டிகளுடன் முடித்துக் கொள்வதும் உண்டு. இவர்கள் தமது உடல் நிலை பற்றி கூடுதல் அக்கறை காட்ட வேண்டும்.

ஆரோக்கியத்துக்கு மற்றுமொரு முக்கிய காரணியாக இருப்பது மதுப்பழக்கமின்மையும், புகைப்பிடித்தல் பழக்கமின்மையுமே. புகைப்பிடிக்கும் பழக்கத்தையும், மது அருந்துவதையும் தவிர்த்துக் கொள்ளல் எமக்கு மட்டுமல்ல எம்மைச் சார்ந்தோர்களுக்கும் சிறந்தது.