Friday, 22 August 2014


உழைத்த களைப்பு, நல் இரவின் நிம்மதியான தூக்கத்தில்தான் நீங்கும். இன்று பலரும் போதுமான தூக்கம் இன்றி அவதிப்படுகின்றனர். தூக்கம் வராமல் தவிப்பதற்கு, தலையணையும் ஒரு முக்கிய காரணம். தலையணை வைக்கலாமா...கூடாதா? எந்த மாதிரியான தலையணையைப் பயன்படுத்த வேண்டும்?.. போன்ற சந்தேகங்களுக்கு கோயம்புத்தூரைச் சேர்ந்த மூளை மற்றும் நரம்பியல் மருத்துவர் ராமகிருஷ்ணன் விளக்கம் தருகிறார்.

'தலையணை வைப்பது நல்லதா?'

'தலையணை வைப்பது நல்லது, கெட்டது என்பதற்கு எந்த மருத்துவரீதியான நிரூபணமும் இல்லை. ஆனால், ஒரு சிலருக்கு தலையணை வைத்துப் படுப்பதால் சில பிரச்னைகள் வரலாம். உயரம் அதிகம் கொண்ட தலையணை பயன்படுத்துவதால் மட்டுமே பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.'

'தலையணை உயரம் எவ்வளவு இருக்க வேண்டும்?'

'டர்க்கி டவல் அளவுக்கு மென்மையாகவும், அதை நான்காக மடித்தால் வரும் தடிமன் அளவுக்கு உயரமும் இருந்தால் போதும். அதையும்விட சற்று உயரமாக இருந்தால்கூட பரவாயில்லை. சின்னக் குழந்தைகளின் எலும்புகள் மென்மையாக இருக்கும். மிக குறைந்த உயரம் உள்ள இலவம் பஞ்சு தலையணையைப் பயன்படுத்தலாம். இதனால், குழந்தைக்கு தூக்கத்தில் மூச்சுத் திணறல் வராமல் இருக்கும்.'

'உயரமான தலையணை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்னைகள் என்ன?'

'முக்கியமான பிரச்னை, கழுத்துப் பகுதியில் சதைப்பிடிப்பு ஏற்படும். இதனால் மறுநாள் கழுத்தைத் திருப்புவதில் சிரமம் ஏற்படலாம். கழுத்துப் பகுதியில் ,இதயத்திலிருந்து மூளைக்குச் செல்லும் முக்கிய ரத்தக்குழாய் உள்ளது. அதன் ரத்த ஓட்டம் பாதிக்கலாம்.'

'வேறு யாரெல்லாம் தலையணைகளை தவிர்க்க வேண்டும்?'

'குறைந்த ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்துப் பகுதியில் எலும்புத் தேய்மானம் உள்ளவர்கள், கழுத்துப் பகுதியில் உள்ள எலும்பில் சவ்வு விலகியவர்கள் தலையணையை தவிர்த்து சம நிலையில் மட்டுமே படுக்க வேண்டும். மற்றவர்கள் தலையணைப் பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை!'


முருங்கை அறியாத ரகசியம் 

முருங்கைக்காய் என்பது ஏழைகளின் காய்கறியாக இருந்தது. ஆனால் உண்மையில் இது நம்ப முடியாத சக்தி நிறைந்தது. இதில் உள்ள விட்டமின்களும், மினரலும் வேறு எங்கும் காண முடியாது .

இது மருத்துவ குணம் நிறைந்தது. வளர்ப்பது எளிது.

பலன்கள்: 

முருங்கை இலை நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்தது.

தோல் பொலிவு பெற மற்றும் சக்தி பெற உதவும். ரத்த கொதிப்பு குறையும். தலை வலி நீங்கும்.

முருங்கை வேர்கள் கண்களின் தசைகளை வலுவாக்கும்.

முருங்கை வேர்கள் எலும்பு பிணைப்பு, தசை நாண்களின் வீக்கத்தை குறைக்கும். குடல் புழுக்களை நீக்கும்.

முருங்கைக்காய் ஆண்மை தன்மையை அதிகரிக்கும்.

ரதத்தின் சர்கரை அளவை மட்டுபடுத்தும்.

இது புற்று நோய்க்கு சிறந்த மருந்து. புற்று நோயை வளராமல் தடுக்கும்.

நல்ல இரவு தூக்கம் கிடைக்கும், அல்சர் நோய்க்கு சிறந்த மருந்து

கால்சியம் சத்து நிறைந்தது. எனவே தாய் பால் சுரக்க பெரியவர்கள் தாய்மார்களுக்கு இதை கொடுப்பர்.

இதில் உள்ள பொட்டசியம் வாழை பழத்தில் உள்ளதை விட மூன்று மடங்கு அதிகம்.

இதில் உள்ள வைட்டமின் ஏ கேரட்டை விட நான்கு மடங்கு அதிகம்.

இதில் உள்ள வைட்டமின் சி ஆரஞ்சு பழத்தில் உள்ளதை விட ஏழு மடங்கு அதிகம்.

இதில் உள்ள ப்ரோட்டின் சத்து பாலில் உள்ளதை விட இரண்டு மடங்கு அதிகம்.

முருங்கை விதைகள் அசுத்த நீரை சுத்த படுத்தும்.