Thursday, 24 July 2014


நீராவி குளியல் ஏன் ? எதற்கு ? 

நமது உடலில் இயற்கை அளித்த கோடிகணக்கான துளைகள் ரத்தத்திற்கு அளிப்பதற்காக உருவாக்கப்பட்டது 
ஆனால், நமது சுற்றுச்சுழல் காரணமாக நமது துளைகள் அனைத்தும் தூசி மற்றும் துகள்களால் அடைக்கப்பட்டு நமது தோலின் நிறம் மங்கத் தொடங்குகிறது. அதுமட்டுமில்லாமல் இரத்தத்திற்கு செல்லும் ஆக்சிஜனையும் தடுக்கிறது.
நீராவி குளியல் மூலமாக நமது உடம்பில் உள்ள மாற்று பொருள்கள் வெளியேற்றப்பட்டு துளைகள் திறக்கப்பட்டு இரத்தத்திற்கு தேவையான ஆக்சிஜனை பெற வழிவகுக்கும்
ஆகவே தான் நீராவி குளியல் முடிந்த பின்பு நமது தோற்ற பொலிவு மாறுவதை நம்மால் உணர முடியும் .
நீராவி குளியல் பெறுவதன் மூலமாக உடல் சோர்வையும் , மன சோர்வையும் ஒருங்கே விரட்டலாம்
தசை இறுக்கத்தை நீராவி குளியல் குறைக்கும் ஆத்ரடீஸ் ( எலும்பு சம்பந்தமான ) சதைபிடிப்பு உள்ள அவர்களுக்கு நல்ல நிவாரணம் கிடைக்கும்
உடல் எடையை குறையவும் வழி வகுக்கும் ஏனெனில் இதன் மூலம் கொழுப்பு குறையும் இரத்த ஓட்டம் சீராகும் .
தோற்ற பொலிவுடன் ஆரோக்கியத்தையும் அடைய முடியும்.
நீராவி குளியல் வாரம் ஒரு முறை செய்து கொள்ளலாம் .
சர்க்கரை நோய் மற்றும் இரத்த கொதிப்பு நோய் உடையவர்கள் தவிர்ப்பது நல்லது .
நீராவி குளியல் என்பது இயற்கையான பாதுகாப்பான முறையாகும் .

No comments:

Post a Comment