மாம்பழம் ஜாக்கிரதை
தொடர்ந்து மாம்பழம் சாப்பிட்டால் வாந்தி, பேதி, மயக்கம், சுவாசப்பிரச்சனை, தலைவலி, வயிற்றுப் பொருமல் வரும் என சாதாரணமாக இருந்து விடுவார்கள். ஆனால் இதுவல்ல காரணம்.
வியாபாரிகள் மாம்பழங்களை பழுக்க வைக்க கால்சியம் கார்பைடு என்னும் இரசாயண பொருளை போட்டு பழுக்க வைக்கின்றனர். இந்த கால்சியம் கார்பைடு CaC2 என விஞ்ஞான குறியீட்டைக் கொண்ட உடலுக்கு கேடுவிளைவிக்கும் இந்த பொருள் வெல்டிங் செய்ய உபயோகிக்கப்படும் ஒரு தடை செய்யப்பட்ட இரசாயணம்.
CaC2 + 2 H2O ¨ C2H2 + Ca(OH)2 என்னும் இரசாயண
இதிலிருந்து வெளிவரும் அசெட்டிலின் என்னும் வாயு காய்கள் மேல் பரவி, தோலை பழுக்கவைக்கும். இதனால் நல்ல பொன் மஞ்சள் நிறத்தில் பார்க்கவே வாயூறும் வர்ணத்தில் காட்சியை கொடுக்கும். மொத்தமாக லாறிகளில் ஏற்றும் போதுகூட ஓரமாய் இந்த பொட்டலங்களை போட்டு விடுவர்கள்.
இதேபோல் எத்திரல் என்னும் இன்னொரு இரசாயணத்தை தண்ணீரில் கரைத்து காய்களை அதனுள் முக்கி எடுத்தால் எல்லா காய்களும் ஒரே சீராக பழுக்கும். விற்பனைக்கு ஏதுவாக இருக்கும்.
எனவே கூடியவரை காயாக வாங்கி, வீட்டிலே பழுக்க வைப்பதுதான் சிறந்தது.
No comments:
Post a Comment